Monday, April 26, 2021

போர்

 வாழ்வு மூன்று கட்டங்களில் நகர்கிறது. இளமைப் பருவம். கல்யாணத்திற்கு முற்பட்ட பருவம். மத்தியில் உள்ள பருவம். முதுமை. வாழ்வை Rewind பண்ணிப் பார்ப்பவர் அனைவருமே ஏனோ சற்று அதிகம் பின்னால் போய் தங்கள் இளமைக்காலங்களையே அசை போடுகின்றனர். அப்போது அதுதான் அவர்கள் குடும்பமா. நடுவில் நடந்த கல்யாணம் குழந்தைகள் கணவன் மனைவி எல்லாரும் Guest role ஆ. ஏன். விடை எனக்கும் தெரியவில்லை. இளமை Carefree ஆனது. பிணைக்கும் கட்டுகள் இல்லை. பொறுப்புகள் இல்லை. கல்யாணம் நம்மைப் பெரியவர்களாக்கி விடுகிறது. தலைவனும் தலைவியும் ஆக்கி விடுகிறது. தலைவனாகத் தகுதி வேண்டும். வீடோ நாடோ எதுவானாலும். ஆனால் கல்யாணங்கள் அரை வேக்காடுகளுக்கிடையேதான் நடக்கிறது.  அனுபவத்தை ஆசானாக கொண்ட வாழ்க்கைக் கல்வி தொடங்குகிறது.

பல நாள்கள் தாண்டி தொடர்கிறேன். வாழ்க்கைப் புத்தகத்தைப் படிக்கும் போது இனிமையான அத்தியாயங்கள் படிக்கவே விரும்புகிறோம். இயற்கைதான். ஆனால் சாத்தியமா என்றால் இல்லை. அதில் சுவையும் இல்லை. நிழல் இருப்பதாலேயே நிஜம் உணரப் படுகிறது.  வெயிலே நிழலின் அருமையை உணரச் செய்கிறது. சிறு ஊடல்கள் சுவைதான். ஆனால் ஊடலும் கூடலும் வள்ளுவர் காலம். இப்போதெல்லாம் வன்முறைதான். சண்டைகள் வன்முறைதான். நேற்று வீட்டில் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது கொஞ்சம் வாக்குவாதம் காராசாரமானது. ஓ சண்டை வேண்டாம். எனக்குத் தலைவலி வந்துவிடும் என்று இடத்தை விட்டுப் போக எத்தனித்த போது அம்மா போகாதே பேசு. இதற்குப் பெயர் சண்டையா என்றனர் குழந்தைகள். அப்போது கேள்வி பிறந்தது. எது சண்டை. 

அசோக மஹாசக்ரவர்த்தி நிகழ்த்தினது ஒரு போர். குருசேத்திர யுத்தமும் போர். ஆங்கிலேயர்களுடன் நாம் நடத்தியது போர். சொத்து தகராறுகள் போர். குழாயடி சண்டையும் போர். குரல் உயர்த்துவதும் போர்தான். உடல் காயப் பட்டால் அதன் பெயர் போர் எனில் மனம் காயப் படுவதும் போர்தான். எந்தப் போரிலும் ஞாயத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டுதான் தேடணும். பின் என்ன. இரு தரப்பிலும் சிறு தவறாவது இல்லாமல் போர் மூளாது. வெளிப்பார்வைக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால் Consciousness ல் ஆவது தப்பு இருந்தால்தான் சண்டை வரும். எனக்கு என்னவோ அசோக சக்ரவர்த்தி நிகழ்த்தின போருக்கும் வீட்டில் குரல் உயர்த்தும் சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் உணர்வளவில் வித்யாசமே இல்லை என்றே தோன்றும்.தப்பு என்றால் தப்புதான். யார் செய்தாலும். குச்சி கொடுத்து அடி வாங்குவது போல தலைவலியை வலியப் போய் வாங்கிக் கொள்ளலாமா.

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...