Monday, July 8, 2019

VERBAL DIARRHEA

வயிறு கோளாறாகி, கழிவு ஆசனவாய் மூலம் வெளியேறினால் அதன் பெயர் ஆங்கிலத்தில் டயேறியா. வார்த்தைகள் தடித்து வாய்வழி கட்டுப்பாடற்று வெளியேறினால் அதன் பெயர் வெர்பல் டயேரியா. தடித்த வார்த்தைகள் மலத்திற்கு சமம். வயிறு கோளாறு நீங்க கழிவு வெளியேறணும் . ஆனால் வெர்பல் டயேரியா கட்டுப்பட வார்த்தைகள் உள்ளே போகணும். எதையான சாப்பிட்டு ஒரு முறையேனும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அவதிப் படாதவர் இல்லை. அதே போல் வார்த்தை தடித்து வார்த்தைகள் கொட்டி அனுபவப் படாதவரும் இல்லை. வயிற்றுப் போக்கை அவதி என்கிறேன். ஆனால் வார்த்தை வீச்சை ஏன் அனுபவம் என்கிறேன், தெரியுமா?  காரணம் உள்ளது.வயிற்றுப்போக்கு வியாதி என்று உணரும் நாம்,அவதி என்று உணரும் நாம், வார்த்தை வீச்சும் வியாதி என்று உணரவில்லை. ஒரு கேவலமான,திருத்திக் கொள்ள வேண்டிய அனுபவம் என்று உணர்வோர் கூட சிலரே.

வயிறு சுத்தமாக இருக்க எப்பவும் சரியாக அளவாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் மாறினாலும் கோளாறு. வார்த்தை சுத்தத்திற்கும் அதேதான். அளவு மீறும் எல்லாம் நஞ்சு. விஷம். இயற்கை ஒரு கொடை . தவறு ஏற்பட முடியாத இறைவனின் அரசாட்சி வழங்கிய கொடை . அதில் எல்லாம் இன்பம்தான். நாம் குறுக்கிடாதவரை இன்பம்தான். நமக்குத்தான் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்க வேண்டுமே? Limited Human Vision கொண்டு தலையிட வேண்டுமே? விலங்குகள் ஒரு நாளை எப்படி எதிர்கொள்ளும்? சாதாரணமாக. ஆனால் சுனாமி வந்தால்,வெடிச்சத்தம் கேட்டால் என்ன செய்யும்? ஓடும்.பயம் கொள்ளும் . பதுங்கும். அதுவே இயல்பு. நமக்கும் அதே விதிதானே . ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒன்று. கஷ்டங்கள் வரும் போது வருந்தலாம். எப்படி வெளிவருவது என யோசிக்கலாம். மகிழ்ச்சியாக இருக்க காரணம் தேவை இல்லை. ஆனால் வருந்த, காரணம் வேண்டும். ஆனால் இப்போ எல்லாம் உல்ட்டா.

மகிழ்ச்சி அடைய மால் போக வேண்டி உள்ளது. வீட்டில் விசேஷம் ஏதும் வர வேண்டி உள்ளது. தோழர்களுடன் டூர் போக வேண்டி உள்ளது. உணவகத்தில் டின்னர் சாப்பிட போக வேண்டி உள்ளது. நல்ல உடை அணிந்து கொள்ள வேண்டி உள்ளது. மற்றவரைக் கவருமாறு பேச வேண்டி உள்ளது. மொத்தத்தில் சிரிக்க காரணம் தேட வேண்டி உள்ளது. அதையும் வெளியே தேட வேண்டி உள்ளது. ஆனால் , வருந்த,முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,வார்த்தை அம்புகள் வீச , அடாதன செய்ய காரணங்கள் தேவைப்படுவதில்லை. மலம் வெளியேற ஒரே வழி உள்ளது. மனமலங்கள் வாய்வழி வெளியேறுகின்றன. ஏனெனில் ஐம்புலன்களில் இரு செயல்கள் செய்ய வாய்க்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பேச்சு,பேச்சு.கல்யாண வீட்டிலும் பேச்சு. மற்ற வீட்டிலும் பேச்சு. சாதாரணமாக காலைக் கடன் கழிக்கிறோமே அது போன்று நிகழும் இயல்புப் பேச்சல்ல. வீட்டில் சீரக ரசமும் கத்திரிக்காய் கூட்டும் சாப்பிட்டு, அது செரிமானமாகி மறுநாள் இயல்பாக வெளியேறும் விஷயம் போன்ற, வெளியேறின பின் அப்பாடா என நிம்மதி தருமே அந்தப் பேச்சல்ல. விடியும் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு போகாமல், சந்தோஷங்களுக்கு காரணம் தேடி, காரணமின்றி துன்பம் தேடி, ஹோட்டல் பரோட்டா சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வது போல், வேண்டாதன எண்ணி மனத்தைக் கெடுத்துக் கொண்டு செய்யும் வெர்பல் டயேரியா .

வயிற்றுப்போக்கு நிற்க வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். தானாக நிற்குமாக இருக்கலாம். ஆனால் நாளாகும். அதற்குள் Weak ஆகி விடுவோம். வெர்பல் டயேரியா நிற்க எண்ணங்களுக்கு,மனசுக்கு வைத்தியம் தேவையே. அது தானாக நிற்பதில்லை. நம் உயிர் உள்ள வரை நிற்பதில்லை. என்ன,வயிற்றுப்போக்கு நமக்குத் தெரியாது நிகழ வாய்ப்பில்லை. VERBAL DIARRHEA IS NOT A CONSCIOUS PHENOMENON , UNFORTUNATELY . சஞ்சய் மஞ்சரேக்கருக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்து செய்தியான , நான் முதல்முறையாகக் கேட்ட VERBAL DIARRHEA என்ற பிரயோகம் இந்த போஸ்ட்டின் மூலம். இந்த பிரயோகம் எனக்குப் புதிதே தவிர கருத்துக்கள் மிகவும் பழசு.

ரஞ்ஜனி த்யாகு  

MOTHER LEADS

No comments:

Post a Comment

கிக்கீ

 கடிகாரம் கூ கூ என்றது. இருட்டில் மணி தெரியவில்லை. எழுந்து விளக்கைப் போட சோம்பேறித்தனம். தலைமாட்டில் அலைபேசி இருந்தால்தான் தூக்கம் வரும் தலை...