அன்னையே சரணம்
எழுத பேனாவும் பேப்பரும் தந்த சுகம் கணினி அதாவது கம்ப்யூட்டர் தரவில்லை. அப்படியானால் என் வயதென்ன. சுகமும் துக்கமும் மாறி வரும் வாழ்வில் சற்றே நிரந்தரம் என்று என்ன உண்டு. கடந்த சில நாட்கள் ஏதேதோ யோசனைகள். என் மாமியாரின் இந்தப் பயணம் நிறைவடைந்து நமக்குத் தெரியாத அடுத்த பயணம் ஆரம்பித்தது. ஆரம்பமாகி இருக்க வேண்டும். மனிதன் Powerless என்பதையே எல்லா நிகழ்வுகளும் உணர்த்தின. எனக்கு விழுங்கவும் ஜீரணிக்கவும் இயலாத ஒன்று என்னவென்றால் மனித இனத்தின் முதன்மைப் படுத்திக் கொள்ளும் ஆசை. மனசு வருத்தத்தில் உள்ள போது கூட, என் வருத்தம் உன்னததை விடப் பெரிது என்பது Silly ஆக உள்ளது. எதற்கென்றே புரியாத Rituals. அதில் வசதிக்கேற்ப செய்து கொள்ளும் மாற்றங்கள். பணத்தால் எல்லாவற்றையும் மூடி விடலாம் என்ற நம்பிக்கைகள். வேதகாலம் தொட்டு வரும் நம்பிக்கைகளை வசதி கருதி Breach செய்வதுடன் நிறுத்தாமல் ஆயிரம் ரூபாயும் ஒரு ஆப்பிள் பழமும் அதற்கு எப்படிப் பரிகாரமாகும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது இதெல்லாம் கூட நெருஞ்சி முள் போல மனசில் நிற்கவே செய்கிறது.சக உயிர்களிடம் இந்த வாழ்வில், பூமியில் உள்ள போது அன்பு செலுத்துவதே அர்த்தம் உள்ள செயல். நம் தொடர்புகள் அனைத்தும் அந்த உயிர்க் கூட்டுடன்தான். உயிரும் கூடும் வேறு. சேர்ந்து இருக்கும் உயிரும் கூடும் மட்டுமே அன்பை உணர இயலும். கூட்டை விட்டு வெளியேறின உயிருக்கு யாரையும் தெரியாது. மறுபடி ஒரு கூடு புகுந்து அடுத்த பயணம். வேறு சக பயணிகள். கிளம்பி விட்டவர்கள் பற்றிய ஆர்பாட்டம், ஆரவாரம் ஏன் அக்கறை கூட Useless. இருக்கும் போது பேசப்படும் கடும் சொற்களுக்குப் பரிகாரம் இல்லை. காட்டப் படும் கடுமைக்கு ஆயிரம் ரூபாயும் ஆப்பிள் பழமும் உதவாது. அதே போல, மறைந்த பின் பண்ணும் Fuss க்கும் பொருள் இல்லை.ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருப்பது அவரவர் Choice. சடங்குகளை நம்புவது நம்பாதது அவரவர் விருப்பம்.
ஆனால்
ஆத்திகம் பேசும் அடியவர்க்கு சிவம் என்றால் அன்பு.
நாத்திகம் பேசும் நல்லவர்க்கு அன்பு என்றால் சிவம்
ஏனோ முரண்பாடுகள். ரசிக்கவில்லை.
No comments:
Post a Comment