2020ம் வருஷத்தின் பிப்ரவரி மாதத்தின் 29 ம் நாளின் அதிகாலைப் பொழுதில் என் இரண்டாவது புத்தகத்தின் ஜனனம். முதல் புத்தகத்தின் சலசலப்பு இரண்டாவதின் முன்னுரையாக மலர்கிறது. சந்தோஷம் , சங்கடம் இரண்டும் அதிர்வுதான். சந்தோஷ அதிர்வுகள் மெத்தனமாக்கி விடுகின்றன. சங்கடத்தால் விளையும் அதிர்வுகளே தூண்டுகோலாகின்றன . தீபம் பிரகாசமாய் எரிய தூண்டுகோல் தேவை. எழுத்துக்களைப் புத்தக வடிவமாகப் பார்க்கும் என் ஆசையை ஊக்குவித்த தூண்டுகோல் நண்பர்களுக்கு முதல் நன்றி. மறுபடி ஒரு பிப்ரவரி 29ஐ சந்திக்க நான்கு ஆண்டுகள் ஆகும். எல்லா ஆண்டுகளும் நல்லபடி நகர பிரார்த்தனைகள். பேதை மனதின் குறுகுறுப்புகள். நாலு வருடம் என்பது காலமாற்றம், இடமாற்றம், இன்னும் எத்தனையோ. மனமாற்றமுமா? இன்னும் செம்மையான மனம் அருள்வாளா அன்னை? வேண்டிக் கொள்ளலாம். புத்தகத்தின் உள்ளே செல்லலாம். சந்திக்க வேண்டிய மனிதர்கள் காத்துள்ளார்கள். தருணங்கள் காத்து நிற்கின்றன . சேர்ந்து பயணிக்கலாம்.
ரஞ்ஜனி த்யாகு
ரஞ்ஜனி த்யாகு
No comments:
Post a Comment